| ADDED : ஆக 04, 2024 10:27 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே காமையூரைச் சேர்ந்தவர் முனிராஜ், 45. ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, அப்பகுதி தொழிலாளி வெங்கட்ராஜ், 24, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.புகாரின்படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர். கடந்த டிசம்பரில், ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார். இதை முனிராஜ் கண்டித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை முனிராஜ் தடுத்தார். இதனால், அவரை கட்டையால் தலையில் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். முனிராஜ், அதே இடத்தில் பலியானார். சிறுமியுடன் தலைமறைவான அந்த வாலிபரை, கெலமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.