மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
27-Feb-2026
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஆருப்பள்ளி சாந்தி நகரை சேர்ந்தவர் சென்னாச்சாரி மனைவி அனுசியா, 35. கடந்த, 25ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, தன் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் புகார் படி, தளி போலீசார் அனுசியாவை தேடி வருகின்றனர்.ஓசூர் அருகே பாரந்துார் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 29, டிரைவர். கடந்த, 2016ம் ஆண்டு அக்., 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை லட்-சுமி நாராயணா, 54, புகார் படி, கெலமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
27-Feb-2026