உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

ஓசூர்: திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி தனலட்சுமி, 58. ஓசூர் மத்திகிரி சிப்பாய் பாளையத்தில், தன் அக்கா சாந்தி, 65, வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 2 காலை, 11:00 மணிக்கு ஷாப்பிங் செல்வதற்காக சென்றவர் மாயமானார். அக்கா சாந்தி புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.நேபாளத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுமி; ஓசூர் அருகே அக்-கொண்டப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். கடந்த, 2ல் மாயமானார். அவரது தாய் புகாரில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்-றனர்.தளி அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் சையது அன்சார் மனைவி சல்மாபானு, 25. கடந்த, 2 காலை வீட்டிலிருந்து மாய-மானார். தளி போலீசில் கணவர் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், கனகபுராவை சேர்ந்த சமீர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.குருபரப்பள்ளியை சேர்ந்த, 19 வயது மாணவி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த, 3 காலை கல்-லுாரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் அளித்த புகாரில், ராயக்-கோட்டையை சேர்ந்த பொக்லின் டிரைவர் சந்தோஷ், 24, தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்து இருந்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி