உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

  • ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக, 491 டன் விதை இருப்பில் உள்ளது.இதுபற்றி வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு சாகுபடிக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல் விதை-216 டன், சிறுதானியங்கள் - 64.2 டன், பயறு வகைகள் - 39 டன், எண்ணெய் வித்து - 172.3 டன் என, 491 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
  • ரசாயன உரங்களான யூரியா - 4,331.9 டன், டி.ஏ.பி., - 1,848.9 டன், பொட்டாஷ் - 2,888.6 டன், காம்ப்ளக்ஸ் - 9,021 டன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி