உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டின் கூரையில் பதுங்கிய 6 அடி நீள சாரைப்பாம்பு

வீட்டின் கூரையில் பதுங்கிய 6 அடி நீள சாரைப்பாம்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாவுத்சரிப், 54. இவரது வீட்டில், 6 அடி நீள பாம்பு புகுந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வீரர்கள் சென்று, வீட்டின் கூரை ஓட்டில் பதுங்கியிருந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை, அரை மணி நேரம் போராடி பிடித்தனர். பின் அதை, அருகே உள்ள ஒன்னரை காப்புக்காட்டு வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ