குட்கா விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என நேற்று முன்தினம் அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்தனர். அதில், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், மத்திகிரி, நல்லுார், பாரூர், மத்துார் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற, கிருஷ்ணகிரி அன்வர்பாஷா, 45, வேப்பனஹள்ளி ராமராஜ், 49, தொரப்பள்ளி சேகர், 32 உள்பட மொத்தம், 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 870 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.