உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு

2ம் திருமணம் செய்த பேராசிரியர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, நவ.10-ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 39. இவர் கிருஷ்ணகிரி தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா, 24, என்பவரை கடந்த ஜன., 26ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கண்ணன் பணிபுரியும் கல்லுாரியில் பயிலும் ரெய்னா ஜெனிபர், 23, என்ற மாணவியுடன் பழகி, மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக அவரை கண்ணன் திருமணம் செய்துள்ளார். அர்ச்சனா புகார் படி, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ