உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அனீஷா ராணி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஆக., 2ம் வாரத்தில் துவங்க உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி கட்டணம், 25,000 ரூபாய் மற்றும் விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும், இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் ஆகலாம். தொடர்புக்கு, உதவி பேராசிரியர்கள் கோவிந்தன், 99422 79190, 73390 02390, சுரேகா, 95007 71299 மற்றும் இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயமுத்துார் - 641 003, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி, 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை