உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர வரும், 18க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல மாணவ, மாணவியருக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு 21, மாணவியருக்கு 14, கல்லுாரி மாணவர்களுக்கு 6, மாணவியருக்கு, 6 என மொத்தம், 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.இதில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ, இலவசமாக பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 18ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளை பொறுத்தவரை வரும், ஜூலை, 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை