அரசு மகளிர் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் தமிழ்துறை இலக்-கியச்சோலை சார்பில் 'கவிச்சோலை' நுால் வெளியீட்டு விழா நடந்தது. கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி நுாலை வெளியிட, கிருஷ்-ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் அனுராதா பெற்றுக் கொண்டார்.அரூர் அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் சிவகாமி, கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.