உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

ஓசூர்: சூளகிரி அருகே மருதேவரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 43. கார் டிரைவர்; ஓசூர் அருகே சித்தனப்பள்ளி தனியார் லே அவுட்டில் வசிக்கிறார்; கடந்த, 8 மாலை, 4:45 மணிக்கு, அந்தி-வாடி - ஓசூர் சாலையில் டொயோட்டா காரில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியிடம், முகவரி கேட்பது போல் நடித்த பிரகாஷ், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து, பள்ளி தலைமையாசிரியருக்கு மாணவி தகவல் தெரி-வித்தார். அவர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன்-தினம் புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை