உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 10 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 10 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த கல்லுக்குறுக்கி மற்றும் பர்கூர், பூமாலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து கல்லுக்குறுக்கியில் எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த குருசாமி, 45, மற்றும் நால்வர் மீது மகாராஜகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல பர்கூரில் எருது விடும் விழா நடத்தியதாக மகேந்திரன், 55, மற்றும் நால்வர் மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ