உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே நாரலப்பள்ளி ஏரிக்கரையில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடத்தப்பட்டது.இதையறிந்த அப்பகுதி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், மகாராஜகடை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஏக்கல் நத்தம் கிரா-மத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 43, சென்னப்பன், 46, சத்திய-மூர்த்தி, 45, ஆகிய, 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர்.மண் கடத்திய லாரி பறிமுதல்கந்திக்குப்பம், ஜூலை 21கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் தனியார் கல்லுாரி அருகே, பாலிநாயனப்பள்ளி வி.ஏ.ஓ., முத்தம்மாள் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ராசிப்பள்ளி ஏரியில் இருந்து கந்திக்குப்பத்திற்கு, 2 யூனிட் மண் கொண்டு செல்வது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவரான, மேல்வெங்கடாபுரத்தை சேர்ந்த ராஜா, 38, உரிமையாளரான கெட்டூரை சேர்ந்த உதயகுமார், 36, ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ