உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் டிரைவர் மீது வழக்கு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் டிரைவர் மீது வழக்கு

ஓசூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சரக்கு ஆட்டோ டிரைவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்-டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. அரசு பள்ளியில், 8 ம் வகுப்பு படிக்கிறார். மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அஞ்செட்டி அருகே கோட்-டையூர் கிராமத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்த், 27, பழகி வந்தார். மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் பாதிக்கப்-பட்ட மாணவியின் தாய், நேற்று முன்தினம் புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்-டுள்ள ஆனந்த், ஹட்கோ போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், கடந்த, 13 இரவு, 7:00 மணிக்கு, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றி-ருந்தேன். அப்போது, ஓசூர் சின்ன எலசகிரி அண்ணா நகரை சேர்ந்த விஜய், 30, என்பவரது சகோதரியின் மகள் உட்பட, 2 சிறு-மிகளை அடையாளம் தெரியாத ஒருவர் ஈவ்டீசிங் செய்தார்.அதனால் இரு சிறுமிகளையம் என் பைக்கில் ஏற்றி கொண்டு, அவர்களது வீடுகளில் இறக்கி விட்டேன். இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் என் புகைப்படத்துடன் காணவில்லை என பதிவு செய்தி-ருந்தனர்.இதனால் புகைப்படத்தை பதிவு செய்த எண்ணிற்கு போன் செய்து விசாரித்தேன். அங்கு வந்த விஜய் தரப்பினர், என்னை சின்ன எலசகிரி பகுதிக்கு அழைத்து சென்று பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, விஜய், சின்ன எலசகிரி கருமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அக-நாதன், 49, கெம்பேகவுடா நகரை சேர்ந்த விஜய்குமார், 30, அம்-பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ், 21, ஆகிய, 4 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை