உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் தி.மு.க., மேற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூரில் தி.மு.க., மேற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஆக., 29) காலை, 9:00 மணிக்கு, ஓசூர் ஆனந்த் கிரான்ட் பேலஸ் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடக்கிறது. உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகிறார். எனவே, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கழக மூத்த நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய கவுன்சிலர்கள், டவுன் பஞ்., தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள், பஞ்., தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ