உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு

டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, விவசாய பணியின்போது, டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி, தலை துண்டாகி பலி-யானார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள, கொள்ளுப்பட்-டியை சேர்ந்த விவசாயி விஜய், 32. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து, உழவு பணி மேற்கொண்டு வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு உழவு பணிக்கு செல்ல வேண்டி, டிராக்டரை ஸ்டார்ட் செய்து விட்டு, டிராக்டரின் பின்பக்கம் சாய்ந்து, ரோடோவேட்டர் கொக்கியை மாற்ற முயற்சி செய்தார்.அப்-போது, நிலை தடுமாறி ரோடோவேட்டர் மேல் விழுந்ததில், விஜய்யின் தலை துண்டாகி, சம்பவ இடத்தில் பலியானார். சம்-பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார் விஜய் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை