சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு அபராதம்
அரூர், டிச. 24-அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், 4 வழிச்சாலையின் இருபுறமும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.