உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விளையாட்டு மைதானம், கோவில் பணிக்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க கோரிக்கை

விளையாட்டு மைதானம், கோவில் பணிக்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க கோரிக்கை

நாமக்கல், 'விளையாட்டு மைதானம் மற்றும் கோவில் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, விற்பனை செய்வதை தடுத்து, எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும்' என, பச்சுடையாம்பட்டி கிராம மக்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் தாலுகா, பச்சுடையாம்பட்டி காலனி காளியம்மன் கோவில் அருகே நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த நிலம், 2003ல், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விளையாட்டு மைதானம் மற்றும் கோவில் பணிகளுக்காக வழங்கப்பட்டது. தற்போது, அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் நேரில் வந்து பார்வையிட்டு, எங்கள் கிராம மக்களுக்கு நிலம் சொந்தம் எனக்கூறி சென்றார். ஆனால், அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பல பேருக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை