உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் சாய்ந்த சிக்னல் கம்பம்

சாலையில் சாய்ந்த சிக்னல் கம்பம்

ஓசூர்: ஓசூரில், சாலையில் சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்த நிலையில், வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஓசூர் நகரிலுள்ள ராயக்கோட்டை - தர்மபுரி சாலை மற்றும் இன்னர் ரிங்ரோடு சந்திக்கும் பகுதியில் அசோக் பில்லர் சர்க்கிள் உள்ளது. 4 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால், எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.நேற்று மதியம், 3:00 மணிக்கு பலத்த காற்றால், அசோக் பில்லர் சர்க்கிள் பகுதியில், இரு சாலைக்கு நடுவே விளம்பர பலகை-யுடன் இருந்த சிக்னல் கம்பம் சாய்ந்து, தர்மபுரி - ஓசூர் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் செல்லாததால், வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சிக்னல் கம்பத்தை அகற்றி, போக்குவரத்து சீரமைத்தனர். அசோக் பில்லர் சர்க்கிள் பகுதியி-லுள்ள சிக்னல் கம்பங்கள் பல நேரங்களில் செயல்படுவதில்லை.அதில் ஒன்று தான் நேற்று, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்ப-டுத்தும் வகையில் சாய்ந்து விழுந்துள்ளது. எனவே, நகரிலுள்ள அனைத்து சிக்னல் கம்பங்களும் சரியான முறையில் உள்ளதா என பார்வையிட்டு, சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க, மக்க-ளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ