உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 5 யூனிட் எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

5 யூனிட் எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

5 யூனிட் எம்.சாண்ட்கடத்திய லாரி பறிமுதல் ஓசூர், டிச. 15-கிருஷ்ணகிரி மாவட்ட கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், ஓசூர் அருகே குமுதேப்பள்ளி காந்தி நகரில் உள்ள மகேந்திரா ேஷாரூம் அருகே, வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 5 யூனிட் எம்.சாண்டை ஓசூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை