ஒசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், கிரானைட் ஏற்றிச் சென்ற லாரி திடீரென பிரேக் பெயிலியர் ஆகி நின்றது. இதனால், பின்னால் வந்த 8 கார்கள் , 4 லாரிகள், ஒரு அரசு பஸ் அடுத்தடுத்துமோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.