மேலும் செய்திகள்
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
08-May-2025
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் அருகே சிக்க வீரப்பதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் எர்ரப்பா மகள் மீனா, 21. இவருக்கு கடந்த, 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், அவர் தனது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், தளி அருகே கல்லுபாலம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரை, மீனாவிற்கு அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக கடந்த, 11ம் தேதி, 2வது திரு-மணம் செய்து வைத்தனர்.விரக்தியடைந்த மீனா கடந்த, 15ல் கணவர் வீட்டில் வைத்து விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் அவரை மீட்ட உறவி-னர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு அவர் உயிரி-ழந்தார். தளி ஸ்டேஷனில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான, 14 நாட்க-ளுக்குள் பெண் இறந்ததால், ஓசூர் சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.
08-May-2025