உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது

டூவீலரில் குட்கா கடத்தல் வட மாநில வாலிபர் கைது

ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி மேம்பாலம் அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் இருந்து ஓசூர் பேகேப்பள்ளிக்கு தடை செய்யப்-பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், ஓசூர் பேகேப்பள்ளியில் மளிகைக்கடை நடத்தி வரும், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷமீம் அகமது, 19, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 15,220 ரூபாய் மதிப்புள்ள, 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை