சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின் படி, http://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.