தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தம-லையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்-களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதி-களில் இருந்து, தினமும், 2,500க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்த்தமலை அடி-வாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பாலிதீன் பைகள் உள்-ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்துள்ளன.இதை அப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வன-விலங்குகள் உண்னும் போது உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதுடன், தீர்த்-தமலை கோவிலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல, நிரந்தர தடை விதிக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.