மேலும் செய்திகள்
தேவகோட்டையில் பிரதோஷ வழிபாடு
01-Oct-2024
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுஅரூர், அக். 30-அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்திலுள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் நந்தி பெருமானுக்கு, பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.* தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகமும் தொடர்ந்து அலங்காரமும் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
01-Oct-2024