உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடச-முத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில், 'பெஞ்சல்' புயலால், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால், அண்ணா நகரில், 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்-தது.இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுகள் வழங்கப்-பட்டன. இதையடுத்து ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்திய-மூர்த்தி, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் ஆகியோர் முன்னி-லையில், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்-டோருக்கு அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், தி.மு.க., நிர்வா-கிகள் முல்லை முருகன், வி.சி.க., நகர செயலாளர் மாயக்-கண்ணன், சுபாஷ், தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் சுஜித், நிர்வாகிகள் ராஜி, ரஜினி, யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை