துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்பு, பிரியாணி வழங்கப்பட்டது. ஊத்தங்கரை டி.எஸ்.பி.,சீனிவாசன் தலைமை வகித்து, துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகளை வழங்கினார். ஊத்தங்கரை பேரூராட்சி பணியாற்றும், அனைத்து துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், எரிமேடையில் பணியாற்றுபவர்கள் உட்பட அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கினர்.