பொங்கலுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
கிருஷ்ணகிரி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்ப-டுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன் வண்ண கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம். அதன்படி, 2 நாட்-களுக்கு முன்பே, வண்ண கோலப்பொடிகளை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், மாடுகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் சலங்கை, பெரிய அளவில் சத்தங்-களை எழுப்பும் சொம்புகளால் செய்த மணிகள் போன்றவற்றை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர்.இதனால், ஆங்காங்கே நடக்கும் வாரச்சந்தைகளில், பொங்கல் பண்டிகைக்காக மாடுகளின் அலங்கார பொருட்களை தற்போது அதிகளவில் குவித்துள்ளனர். அதேபோல், பொதுமக்கள் பொங்க-லுக்கு புத்தாடை வாங்க, குடும்பத்துடன் ஜவுளிக் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் அனைத்து ஜவுளிக் கடைக-ளிலும் கூட்டம் அலைமோதுகிறது. 2 நாட் களுக்கு முன்பே, கிருஷ்ணகிரி நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் போக்குவ-ரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.