உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் ஓடும் மழை நீர்: வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் ஓடும் மழை நீர்: வாகன ஓட்டிகள் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதி-களில் கடந்த, 2ல், பெஞ்சல் புயல் எதிரொலியால், பலத்த மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் என அனைத்து பகுதிகளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்-தியது. இந்நிலையில் போச்சம்பள்ளி, குள்ளனுார் பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர், தர்மபுரி -திருப்பத்துார் சாலையில் குள்ளனுார் பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை சாலையில் செல்கிறது. இதனால் இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை