உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாறைக்கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

பாறைக்கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, எலத்தகிரி அருகே பாறைக்கோவிலின் தேர்த்திரு-விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, திருக்குடும்ப பாறை கோவிலின் தேர்த்திருவிழா கொடி ஏற்றத்-துடன் துவங்கியது.சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் கொடி-யேற்றி வைத்தார். பின்னர் திருக்குடும்ப ஆலயத்தின் வேண்டுதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அன்னை தேர்பவனி ஆலயத்தை சுற்றி நடந்தது. இந்த தேர்த்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான மக்கள் சாதி, மத வேறுபாடுகளின்றி, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை