உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் பலி

மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் பலி

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, புலியூர், பஞ்சமோட்டூரை சேர்ந்தவர் பார்த்திபன், 40. இவரின், 9 வயது மகன் ஹரிசிவா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 18ல் வீட்டில் இருந்த மாணவன் ஹரிசிவா மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !