உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடு அறுக்கும் கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

ஆடு அறுக்கும் கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

ஓமலுார், ஆடு அறுக்கும் கத்தியால் குத்தி, மாமனாரை கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கொத்தபுளியனுார், காட்டுவளவை சேர்ந்தவர் மகேஸ்வரி, 32. இவரது கணவர், மேச்சேரியை சேர்ந்த, ஆடு வியாபாரி மயில்சாமி, 35. இவர்களது மகள்கள் ப்ரியதர்ஷினி, 13, கார்த்திகா, 11, கோபிகாஸ்ரீ, 9. ஆனால் ஆண் குழந்தைகள் இல்லை என அடிக்கடி மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதேபோன்று ஒரு வாரத்துக்கு முன் தகராறு ஏற்பட, மகேஸ்வரி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த, 3 இரவு, 10:00 மணிக்கு, அங்கு சென்ற மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார்.அப்போது மகேஸ்வரியின் தந்தை பழனிசாமி, 52, 'எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்' என, மருமகனிடம் கூறியுள்ளார்.அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மயில்சாமி, அவரது இடுப்பில் வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால், பழனிசாமி வயிற்றில் குத்தியுள்ளார்.படுகாயம் அடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவட்டிப்பட்டி போலீசார், மயில்சாமியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி