மேலும் செய்திகள்
2 ,711 தொழிலாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
22-May-2025
அஞ்செட்டி, ஓசூர் வனக்கோட்ட வனத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகியவை சார்பில், பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, அஞ்செட்டி அருகே சேசுராஜபுரத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் தலைமை வகித்தார்.உதவி வன பாதுகாவலர் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன், அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன் மற்றும் வனத்துறையினர், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு விளக்கி கூறினர். முகாமில், 30 பழங்குடி மலைவாழ் மக்கள் மற்றும் 10 பழங்குடி அல்லாதோர் நல அட்டை பெற, தொழிலாளர் நலத்திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்தனர்.
22-May-2025