அரசு பாலிடெக்னிக்கில் மாணவர்களுக்கு வரவேற்பு
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 2025---26ம் ஆண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டு, மாணவ, மாணவியர் வரவேற்பு விழா நடந்தது. இதில், முதலாமாண்டு மாணவர்களை துறை தலைவர் செல்வராஜ் வரவேற்று, ஆசிரியர்களை அறிமுகம் செய்து வைத்தார். கல்லுாரி முதல்வர் பொறுப்பு எழிலரசு தலைமை வகித்தார். பூங்கொத்துக்கள் கொடுத்து, மாணவ, மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.