உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, நகை திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, நகை திருட்டு

தேன்கனிக்கோட்டை: கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே பர்தால் உன்னிசா லே அவுட்டில் வசிப்பவர் கிரீஷ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்-கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தில் உள்ள ரேணுகா எல்-லம்மா தேவி கோவிலில் பூசாரியாக உள்ளார்.கடந்த, 10ல் காலை கோவிலில் பூஜை முடித்து விட்டு, இரவில் கோவில் நடையை சாத்தி பூட்டி விட்டு, அன்னியாளத்திலுள்ள சிக்கண்ணா என்பவரது வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ஊருக்கு சென்று விட்டார். நேற்று காலை, 11:45 மணிக்கு, கிரீஷை தொடர்பு கொண்ட சிக்கண்ணா, கோவில் மரக்கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த கிரீஷ், கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டி-ருந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கத்-தாலி, 2 கிராம் தங்கக்காசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. கிரீஷ் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி