மரம் ஏறும் தொழிலாளி தவறி விழுந்து பலி
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்-துாரைச் சேர்ந்தவர் மாதையன்,40; மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரின் தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகு-றித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.