உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்

சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்

தேன்கனிக்கோட்டை, ன்கனிக்கோட்டை அருகே பென்னங்கூர் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் சிலர், அப்பகுதியில் நேற்று விளையாடினர். அங்கிருந்த அரளிக்காய்களை பறித்து, பழங்கள் என நினைத்து சாப்பிட்டனர். இதில், பென்னங்கூரை சேர்ந்த அப்துல் ஹஷித் மகன் அப்துல்ஹனன், 9, ஆசிப் ஷேக் மகன் ஆயரா ஷேக், 8, பைஷர் மகன் முகமது சையான் ஷேக், 8, மற்றும் மகள் சுனேரா, 7, ஆகியோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ