உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச. 14-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, இரு நாட்களாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் நீர்வரத்து, 395 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று, 529 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 331 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. அதே போல், ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம், 560 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 830 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.78 அடியாக நீர்மட்டம் உள்ளதால், அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணையில், 68 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. ஊத்தங்கரை, 48.60, நெடுங்கல், 39, பெனுகொண்டாபுரம், 32.30, போச்சம்பள்ளி, 29, பாரூர், 28, சின்னாறு அணை, 23, கிருஷ்ணகிரி, சூளகிரி தலா, 19.30, தேன்கனிக்கோட்டை, 16, கே.ஆர்.பி., அணை, 13.60, ஓசூர், 8.10, ராயக்கோட்டை, 7, கெலவரப்பள்ளி, 6, தளி, 5, என மொத்தம், 362.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி