உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீயில் கருகி பெண் பலி

தீயில் கருகி பெண் பலி

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உள்ள ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி மேனகா, 49. இவர் கடந்த, 19, காலை, ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சேலையில் தீப்பிடித்தது. பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் இறந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை