2 டன் பாலிதீன் பறிமுதல்
மதுரை,: மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவுப்படி உதவி நகர்நல அலுவலர் அபிேஷக் தலைமையில் சுகாதார அலுவலர் கோபால், ஆய்வாளர்கள் மாரிமுத்து, அலாவுதீன், சரவணகுமார் சிந்தாமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட பாலித்தீன் தயாரித்து விற்கும் இடத்தில் 2 டன் பைகளை பறிமுதல் செய்தனர்.