ரூ.3.84 லட்சம் பறிமுதல்
மதுரை: லோக்சபா தேர்தலையொட்டி நேற்று மதுரை தெற்கு தொகுதி குருவிக்காரன் சாலையில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கார் ஒன்றை சோதனையிட்டதில் ரூ.2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிழக்கு தொகுதி சத்திரப்பட்டி அருகில் ரூ.69 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சோழவந்தான் தொகுதியில் குருவித்துறை ரோட்டில் காரில் வந்தவர்களிடம் ரூ.84 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.