உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பராமரிப்பின்றி பாழாகும் நாடக மேடை

பராமரிப்பின்றி பாழாகும் நாடக மேடை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தையில் உள்ள நாடக மேடை பராமரிப்பின்றி வீணாகிறது.இங்குள்ள தாதம்பட்டி, நீரேத்தான் மந்தை திடலில் பழுதடைந்த நாடக மேடை அகற்றப்பட்டது. பின் 2006ல் ரூ.2.60 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்டப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் பராமரிப்பின்றி கட்டடங்கள், படிக்கட்டுக்கள் சேதமடைந்துள்ளன. இந்த மந்தை திடலில் தான் கட்சி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை போக்குவரத்துக்கு இடையூறாக மேடை அமைத்து நடத்துகின்றனர். நாடக மேடையை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ