மனுக்களுடன் குவிந்த மக்கள்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் பி.மேட்டுப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். 8 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் மனுக்கள் வழங்கினர்.முகாமில் 538 மனுக்கள் பெறப்பட்டன. வருவாய் துறையில் 400 மனுக்களும், அடுத்து மகளிர் உரிமைத்தொகைக்கும், மற்ற மனுக்கள் மிகவும் குறைவாகவும் இருந்தன.