உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி

மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை, : தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் செல்ல ராஜாமணி தாக்கல் செய்த மனு:சங்க உறுப்பினர்களின் லாரிகள் அரசின் மணல் குவாரிகளிலிருந்து மணல் அள்ளி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.​​மணல் அள்ளுவதில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை மேற் கொண்டது. அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டுள்ளன. மணல் அள்ளுவதை முடக்கிய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் செயலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி தமிழக கனிமவளத்துறை செயலர், நீர்வளத்துறை செயலர், பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. மணல் குவாரியை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி என்.சதீஷ்குமார்: பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணல் குவாரிகளை அரசு மூடியுள்ளதை தவறாக புரிந்து கொண்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை மீண்டும் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.மனுதாரர் சங்க உறுப்பினர்களின் லாரிகள் மணல் அள்ளுவதில் ஈடுபட்டுள்ள காரணத்திற்காக மட்டும் மீண்டும் மணல் குவாரிகளை திறக்குமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு உரிமையாக கோர முடியாது.தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ