மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்ஸவம் மார்ச் 18 ல் நடக்கிறது.இதற்காக அன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு கோயிலுக்கு திரும்புவார்கள். அந்நாளில் அதிகாலை 4:00 மணி முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு திரும்பும் வரை நடைசாத்தப்பட்டிருக்கும்.கோயிலின் ஆயிரங்கால் மண்டபம், ஆடிவீதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.