வியாபாரிகள் சங்கம் மனு
மேலுார்: மேலுார் தினசரி காய்கறி மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று நகராட்சி தலைவர் முகமதுயாசின், கமிஷனர் கணேசன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அதில் வாடகை நிலுவை பாக்கி இல்லாத நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகளை சீட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும். கடைகள் ஒதுக்கீட்டில் தனிநபர்கள் தலையீடு இருக்ககூடாது என குறிப்பிட்டிருந்தனர்.