மரக்கன்று நடும் விழா
மதுரை : மதுரை தென்கரை கண்மாய் சோழவந்தானில் மகளிர் தினத்தை முன்னிட்டு பார்வை பவுண்டேஷன் சார்பில் 'மகளிர் காடு'என்ற பெயரில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் பேசுகையில், 'மதுரை முழுவதும் 1.17 லட்சம் மரங்கள் நடவு செய்துள்ளேன். இந்நிகழ்விற்கு பிறகு 9 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து முடித்து விடுவேன். மதுரையில் மனிதனால் உருவாக்கப்படும் இரண்டாவது காடு' என்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் வழங்கிய பூரணம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்