மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு
07-Jun-2025
மதுரை: மதுரை மாவட்டத்தில் 14 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழகத்தில் எஸ்.ஐ., அந்தஸ்தில் உள்ள 400க்கும் மேற்பட்டோருக்கு காலி பணியிடம் இல்லாததால் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்க அரசு காலம் தாழ்த்தி வருகிறது. சிலர் நீதிமன்றத்தை நாடியதால் புதிய பணியிடங்களை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த ஏப்.29ல் சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எஸ்.ஐ., அந்தஸ்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார் என அறிவித்தார். இதன்படி தமிழகம் முழுவதும் 280 ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூர், வில்லுார், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு ஆகிய ஸ்டேஷன்களில் விரைவில் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
07-Jun-2025