உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

இணைப்பு பாலத்தை பாதுகாக்க வேண்டும்சோழவந்தான் வைகை தென்கரை இணைப்பு பாலத்தின் இருபுறமும் ஆலமரங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் பாலத்தின் உறுதிபாடு கேள்விகுறியாகிவிடும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கவுரிநாதன், தென்கரை.ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி, தெற்கு மாரட்வீதியில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.-- சுரேஷ்பாபு, தெற்குவாசல்.ரோட்டோர கடைகளால் இடையூறுமதுரை தெற்குவாசல் மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோர வியாபாரிகள் கடைகள் வைத்திருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பாலா, தெற்குவாசல்.தெருநாய்கள் தொந்தரவுமதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் பிரித்தம் தெருவில் வெறிநாய்கள் உலா வருகின்றன. பலரை கடித்துள்ளன. அத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ஹரிஷ், துரைசாமி நகர்.* மாநகராட்சி 13 வது வார்டு மகாலட்சுமிநகர்,கே.வி.ஆர். நகர், ஐலேண்ட் நகர்உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- -சுரேஷ், கே.வி.ஆர். நகர்.ரோட்டில் கழிவுநீர்மதுரை எச்.எம்.எஸ். காலனி நர்மதை தெருவில் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும் பலனில்லை.-- ஸ்ரீதேவி, எச்.எம்.எஸ்.காலனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ